Tuesday, April 8, 2008

எந்தப் புள்ளியில் இருந்து விரிந்தோம்?

அந்தப் புள்ளியே அகம் புறமாக்கும்.
அந்தப் புள்ளியே இணைக்கும் பிரிக்கும்.
அந்தப் புள்ளியே பிறப்பும் இறப்பும்.
அந்தப் புள்ளியே ஆன்ம தாகம்.
அந்தப் புள்ளியே ஆத்மாவின் ராகம்.

அனைத்தும் உணர்த்தியது நட்பு

படிமப்பாறைகளின் தகர்ப்பு
முறுவலுக்கான முகவரி
இயல்புக்கான உள ஓய்வு
எழுத்திற்கான வனப்பு
அனைத்தும் உணர்த்தியது நட்பு

நட்பின் வரிகள்

என்னை எனக்குணர்த்திய நட்பைப்பற்றி, என் தோழமையின் அழகு பற்றி மைத்துளிகளின் ஈரகசிவு இந்தப் பதிப்பு.தொடர் கவிதையல்ல, குறுங்கவிதைக் குறிப்பாக, குவிப்பாக நேரங் கிடைக்கும் போதெல்லாம் இங்கு நட்பின் வரிகளாக இந்த மனக்கூடு சுமக்கும்.