பருத்த கலசங்களும்,
பெருத்த தம்புராவுமே
நட்பை நிலைப்படுத்தும்
நிர்வாண நிலையென்றால்
கரிக்கிறது கண்மணிகள்.
உறுத்தலின்றி தரித்த விசம்போல்
ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில்
மாள்வது நட்பாகில்....
மானுடம் சிகிலமாகி,
நாகரீக வெளிகளெல்லாம்
நரகல் புவியாகி,
சீழ் பிடித்து மணக்கும்.
என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
நட்பென்ற உன்னதத்தின்
மேன்மையைப் புரிய வைக்க
நண்பா!......
என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
Thursday, April 10, 2008
Subscribe to:
Posts (Atom)